• Wed. May 21st, 2025

24×7 Live News

Apdin News

பானு முஷ்டாக்: புக்கர் பரிசு வென்ற ஹார்ட் லேம்ப் நூலை எழுதிய இந்திய எழுத்தாளர் – யார் இவர்?

Byadmin

May 21, 2025


பானு முஷ்டாக், புக்கர் பரிசு, ஹார்ட் லேம்ப்

பட மூலாதாரம், Getty Images

இந்திய எழுத்தாளர்-வழக்கறிஞர்-ஆர்வலர் பானு முஷ்டாக் ‘ஹார்ட் லேம்ப்’ ( Heart Lamp) என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக புக்கர் விருதை வென்று வரலாறு படைத்துள்ளார்.

இந்த பரிசை வென்ற முதல் கன்னட நூல் இதுவாகும். இந்த கதைத் தொகுப்பை தீபா பாஷ்டி என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

1990 முதல் 2023 வரையிலான முப்பது ஆண்டுகளில் முஷ்டாக் எழுதிய 12 சிறுகதைகளைக் கொண்ட ஹார்ட் லேம்ப், தென்னிந்தியாவில் வாழும் முஸ்லிம் பெண்களின் கஷ்டங்களை அழுத்தமாகப் படம்பிடிக்கிறது.

கீதாஞ்சலி ஸ்ரீயின் டோம்ப் ஆஃப் சாண்ட் ( Tomb Of Sand) 2022 -ல் இதே பரிசை வென்ற நிலையில், பானு முஷ்டாக் இந்த விருதை தற்போது பெற்றுள்ளார் . அந்நூல், டெய்ஸி ராக்வெல்லால் இந்தியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது ஆகும்.

By admin