• Sat. Dec 20th, 2025

24×7 Live News

Apdin News

பாப்பாள் : திருப்பூர் பள்ளியில் சத்துணவு செய்ய விடாமல் தடுக்கப்பட்ட தலித் பெண் – 7 ஆண்டுக்கு பிறகு நீதி கிடைத்தது எப்படி?

Byadmin

Dec 20, 2025


பாப்பாள்
படக்குறிப்பு, பாப்பாள்

”உன்னை 2006-லேயே துரத்தி விட்டோமே, இப்போது எதற்கு திரும்பி வந்தாய்? நீ சமைத்து எங்கள் பிள்ளைகள் சாப்பிடுவதா?” எனக் கூறி என்னைக் கையைப் பிடித்து இழுத்து தள்ளிவிட்டு, பாத்திரங்களை எடுத்து வீசி, என்னை மாற்றாமல் பள்ளிக்கூடத்தைத் திறக்க விடமாட்டோம் என்று மூடிவிட்டனர்!”

கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தனக்கு நேர்ந்ததை பிபிசியிடம் இப்படி விவரித்தார் பாப்பாள்.

திருப்பூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராகப் பணி செய்து வரும் பட்டியலினத்தைச் சேர்ந்த பாப்பாளுக்கு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த வன்கொடுமை தொடர்பான வழக்கில் நவம்பர் 28 அன்று தீர்ப்பு வந்தது.

அவரைப் பணி செய்யவிடாமல் தடுத்த பிற சமுதாயத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பணியில் சேர்ந்ததில் இருந்து ‘ஊர் ஊராக துரத்தப்பட்ட’ பாப்பாள்

பாப்பாளுக்கு கடந்த 2006ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் சத்துணவுத் திட்ட சமையலராக கந்தாயிபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் பணியில் சேர நியமன ஆணை வழங்கப்பட்டது. அங்கு அவர் பணியில் சேரச் சென்றபோது, சமையல் செய்வதற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை.

By admin