• Sun. Jun 15th, 2025

24×7 Live News

Apdin News

பாமக எம்எல்ஏக்களுக்கு வலை..? – போட்டி போட்டு ஆட்களை இழுக்கும் திமுக – தவாக! | Is DMK trying lure PMK MLAs

Byadmin

Jun 14, 2025


பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் அதிகார யுத்தம் நாளுக்கு நாள் வீரியமாகிக் கொண்டே போகிறது. ராமதாஸையும் அன்புமணியையும் சமாதானப்படுத்த பாஜக தரப்பில் ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாக எடுக்கப்பட்ட முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், முக்கிய நிர்வாகிகள் உள்பட 45 பேரை பொறுப்புகளில் இருந்து நீக்கினார் ராமதாஸ். அவர்களில் சிலரை மீண்டும் பொறுப்பில் அமர்த்தி அதிரடி காட்டினார் அன்புமணி. கட்சிக்குள் நடக்கும் இந்த ஏட்டிக்குப் போட்டிகளை எல்லாம் பார்த்துவிட்டு, கீழ்மட்ட நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சி முகாம்களுக்கு தூதுவிட தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

​பாமக-​வில் அன்​புமணி​யின் ஆதிக்​கத்​தைப் பிடிக்​காமல் தான் பண்​ருட்டி வேல்​முரு​கன் உள்​ளிட்ட செல்​வாக்​கான மனிதர்​கள் கட்​சியை விட்டு வில​கி​னார்​கள். இதில், வேல்​முரு​கன் தமிழக வாழ்​வுரிமை கட்​சி​யைத் தொடங்கி தற்​போது திமுக கூட்​ட​ணி​யில் எம்​எல்​ஏ-​வாக​வும் இருக்​கி​றார். தந்​தைக்​கும் மகனுக்​கும் மோதல் வெடித்த சமயத்​தில், கட்​சியை பலப்​படுத்​து​வதற்​காக வேல்​முரு​கன், காடு​வெட்டி குரு​வின் மகன் உள்​ளிட்​ட​வர்​களை மீண்​டும் பாமக-வுக்​குள் கொண்​டுவர ராம​தாஸ் தரப்​பில் ஒரு மூவ் நடந்​த​தாகச் சொல்​கி​றார்​கள்.

இந்த நிலை​யில் அண்​மை​யில், வேல்​முரு​க​னின் சகோ​தரரும் தமிழக வாழ்​வுரிமைக் கட்​சி​யின் ஒழுங்கு நடவடிக்​கைக் குழு தலை​வ​ரு​மான திரு​மால்​வளவன் தைலாபுரம் தோட்​டத்​தில் ராம​தாஸை சந்​தித்​துப் பேசி​னார். இந்​தச் சந்​திப்​புக்​குப் பிறகு, “நான் வந்​து​விட்​டேன் என்​ப​தால் சீக்​கிரமே அன்​புமணி​யும் அய்​யாவை சந்​திக்க வந்து விடு​வார்” என்று சொன்​னார் திரு​மால்​வளவன்.

அது​போல​வே, ராம​தாஸை சந்​திக்க தைலாபுரத்​துக்கு ஓடோடி வந்​தார் அன்​புமணி. ஆனாலும் அப்​போது ராம​தாஸும் அன்​புமணி​யும் முகம்​கொடுத்து பேசிக்​கொள்​ள​வில்லை என்​கி​றார்​கள். அதேசம​யம், வேல்​முரு​கன் உள்​ளிட்​ட​வர்​கள் மீண்​டும் பாமக-வுக்​குள் வந்​து​விடு​வார்​களோ என்ற அச்​சத்​தில் தான் அன்​புமணி தைலாபுரத்​துக்கு வந்து போன​தாகச் சொல்​கி​றார்​கள். இந்த நிலை​யில், பாமக-​வில் தற்​போது நில​வும் நிச்​சயமற்ற சூழலைப் பயன்​படுத்தி பிறகட்​சிகள் பாமக-​வின் கீழ்​மட்ட நிர்​வாகி​களுக்கு வலை​வீச ஆரம்​பித்​திருக்​கின்​றன.

அதேசம​யம் சமு​தாய ரீதி​யாக சிந்​திக்​கும் பாமக-​வினர் பலரும் வேல்​முரு​கன் அலு​வல​கக் கதவைத் தட்டி வரு​வ​தாக ஒரு செய்தி தடதடக்​கிறது. இதுகுறித்து தமிழக வாழ்​வுரிமைக் கட்​சித் தலை​வர் வேல்​முரு​க​னிடம் கேட்​டதற்​கு, “பாமக-​வில் இருந்து தாமாக வரு​வோரை வரவேற்​கி​றோம். தென்​மாவட்​டங்​களில் இருந்து பலர் தவாக-​வில் இணைந்​துள்​ளனர். தவாக-வை பாமக உடன் இணைக்​கப் போவ​தாக செய்தி பரப்​பு​கி​றார்​கள்.

ஆனால், அப்​படி​யான திட்​டம் எது​வும் எங்​களுக்கு இல்​லை. ஏனென்​றால் நாங்​கள் பாமக-வை விட்டு வெகுதூரம் வந்​து​விட்​டோம். மாநிலம் முழுக்க கட்​சிக்கு நிர்​வாகி​களை நியமிக்​கப்​பட்டு எங்​கள் கட்​சி​யானது மாநிலக் கட்​சி​யாக திகழ்ந்து வரு​கிறது. இடது​சாரி சிந்​தனை​யாளர்​கள் பலர் எங்​கள் கட்​சி​யில் இணைந்து வரு​கின்​ற​னர். அந்த வகை​யில், எங்​களு​டன் இணைந்து மக்​கள் பணி​யாற்ற வரு​வோரை இன்​முகத்​தோடு வரவேற்​கி​றோம்” என்​றார்.

இதனிடையே பாமக எம்​எல்​ஏ-க்​கள் இரு​வ​ருக்கு திமுக குறி​வைத்​திருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள். அதில் ஒரு​வரை அழைத்து வரும் பொறுப்பு சேலம் எம்​பி-​யான டி.எம்​.செல்​வகணபதி வசம் ஒப்​படைக்​கப்​பட்​டிருப்​ப​தாக​வும் பாமக வட்​டாரத்​திலேயே கிசுகிசுக்​கி​றார்​கள்.

பாமக-​வினர் மாற்று முகாம்​களை நோக்கி நகர ஆரம்​பித்​திருப்​பது குறித்து பாமக-​வின் நிர்​வாகக் குழு உறுப்​பின​ரான தர்​மலிங்​கத்​திடம் கேட்​டதற்​கு, “தந்​தைக்​கும் மகனுக்​கும் இடை​யில் ஏற்​பட்​டிருக்​கும் மனத்​தாங்​கலை தங்​களுக்​குச் சாதக​மாகப் பயன்​படுத்​திக் கொண்​டு, கட்​சிக்​குத் துரோகம் செய்​தவர்​கள் ஆறு​தல் கூற வருகி​றோம் என்ற பெயரில் வந்து பார்ப்​பது பாமக தொண்​டர்​கள் மத்​தி​யில் ஆதங்​கத்​துடன் கூடிய அதிருப்​தியை ஏற்​படுத்தி இருப்​பது உண்மை தான்.

இருந்​தா​லும் விரை​வில் இரு​வ​ரும் கலந்​துபேசி நல்ல முடிவை எட்​டு​வார்​கள் என்ற நம்​பிக்​கை​யில் எங்​களைப் போன்​றவர்​கள் அமை​தி​யாக இருக்​கி​றோம்” என்​றார். ஒரு காலத்​தில் வெயிட்​டான மத்​திய அமைச்​சர்​களை​யும் தன்​னகத்தே வைத்​திருந்த பாமக-வுக்கா இப்​படியொரு நிலை வரவேண்டும்?



By admin