• Fri. Nov 28th, 2025

24×7 Live News

Apdin News

பாமக: பொதுக்குழுவும், ஆவணமும் போலியா? அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஜி.கே.மணி

Byadmin

Nov 28, 2025


அன்புமணி, பாமக, தேர்தல் ஆணையம், ராமதாஸ்

பட மூலாதாரம், Anbumani/X

“கடந்த 2023ஆம் ஆண்டு பா.ம.க பொதுக்குழு நடந்ததாக போலி ஆவணத்தை தேர்தல் ஆணையத்தில் அன்புமணி சமர்ப்பித்துள்ளார். ஆனால், அப்படியொரு பொதுக்குழுவே நடக்கவில்லை. அதை வைத்து ஜனநாயகப் படுகொலையை தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது” என்று குற்றம் சாட்டுகிறார், அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி.

அதோடு, போலி ஆவணங்களின் அடிப்படையில் கட்சியை அன்புமணி திருடிவிட்டதாகவும் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜி.கே.மணி குற்றம் சுமத்தினார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அன்புமணி தரப்பு மறுத்துள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் வலுத்து வருகிறது. அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ராமதாஸ் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

பா.ம.க தலைவராக தனி அணியாக அன்புமணி செயல்பட்டு வரும் நிலையில், கடந்த செப்டம்பர் 15 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க செய்தித் தொடர்பாளரும் அன்புமணியின் ஆதரவாளருமான வழக்கறிஞர் கே.பாலு, “அன்புமணியை பா.ம.க தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது” எனக் கூறினார்.

“தேர்தல் ஆணையம் அளித்துள்ள அங்கீகாரம் என்பது 2026 ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும்” எனவும் அவர் தெரிவித்தார். இதற்கு எதிராக செப்டம்பர் 16 அன்று தேர்தல் ஆணையத்தில் கடிதம் ஒன்றை பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணி கொடுத்தார். அதில், ‘கட்சியின் தலைவராக ராமதாஸை அங்கீகரிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

By admin