• Wed. Aug 13th, 2025

24×7 Live News

Apdin News

பாமா – காமாட்சி: முதுமலையில் 55 ஆண்டுகளாக இணை பிரியாத இரு யானைகளின் அற்புத பந்தம்

Byadmin

Aug 12, 2025


பாமா-காமாட்சி யானைகள், முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாம், உலக யானைகள் தினம்

பட மூலாதாரம், Mudumalai Tiger Reserve

படக்குறிப்பு, இணை பிரியா தோழிகளான பாமா-காமாட்சி

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

“எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்லும். அருகருகே நிற்க வைக்காமல் உணவு கொடுத்தால் பிடிக்காது. 55 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டும் இணைபிரியா தோழிகளாக உள்ளன. ஒன்றுக்கொன்று துணையாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கின்றன.”

முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நெருங்கிய தோழிகளாக உள்ள காமாட்சி – பாமா யானைகளின் நட்பு குறித்து இவ்வாறு விவரித்தார், முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநரான சி வித்யா.

இரு யானைகளின் நட்பும் பலரையும் ஆச்சர்யப்படுத்துகிறது. சமீபத்தில் தமிழ்நாடு வனத்துறையின் கூடுதல் முதன்மை செயலாளர் இவ்விரு யானைகள் குறித்த காணொளியை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து, அந்த யானைகள் குறித்து அறிய வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு அதிகரித்தது.

நட்பை வெளிப்படுத்தும் அவ்விரு யானைகளின் செயல்கள் பலவும் சுவாரஸ்யத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளன.

By admin