• Wed. Feb 4th, 2026

24×7 Live News

Apdin News

பாம்புகள் எந்த நேரத்தில் வீடுகளுக்குள் அதிகம் வருகின்றன? கோவையில் நடத்திய ஆய்வில் புதிய தகவல்

Byadmin

Feb 4, 2026


தமிழ்நாடு, பாம்புக்கடி, நகரமயமாக்கல்

பட மூலாதாரம், SAMSON KIRUBAKARAN

படக்குறிப்பு, சுருட்டை விரியன்

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

நகரமயமாக்கலால் பாம்புகளின் வாழ்விடம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய, கோவை நகருக்குள் 35 மாதங்களில் பாம்பு மீட்பாளர்களால் பிடிக்கப்பட்ட பாம்புகள் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் குறிப்பிட்ட சில மாதங்களில், குறிப்பிட்ட நேரங்களில் பாம்புகள் வீடுகளுக்குள் அதிகளவில் படையெடுப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் அதிக ஆபத்தானவையாக கருதப்படும் ‘பிக் 4’ நச்சுப் பாம்புகள் கோவை நகருக்குள் அதிகளவில் இருப்பதையும் அந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

வரும் காலத்தில் பாம்புக்கடி சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இதுகுறித்த ஆய்வுகள் தொடர வேண்டுமென்று வனஉயிரின உயிரியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழக வனத்துறை இதற்காக ‘நாகம்’ என்ற பிரத்தியேக செயலி உருவாக்கியுள்ள நிலையில், இதற்காக மத்திய அரசின் சார்பிலும் பிரத்யேக செயலி உருவாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் குடியிருப்புகளுக்குள் படையெடுக்கும் பாம்புகள்

தேசிய சுகாதார நிறுவனக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பாம்புக்கடி உயிரிழப்பில் மேற்கு வங்காளம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளன.

By admin