• Sat. Nov 22nd, 2025

24×7 Live News

Apdin News

பாம்புகள் வீட்டுக்கு வருவதை தடுக்கும் செடிகள் உண்மையில் உள்ளதா?

Byadmin

Nov 22, 2025


தாழை, மனோரஞ்சிதம் போன்ற தாவரங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் பாம்புகள் வரும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதற்கு எவ்வித அறிவியல் ஆதாரங்களும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

பட மூலாதாரம், Getty Images/BBC

‘இந்தச் செடியை வைத்திருந்தால், உங்கள் வீட்டிற்கு அருகில் பாம்புகள் வராது’, ‘இது உங்கள் வயலில் இருந்து பாம்புகளை விரட்டும் செடி’ என்பன போன்ற தலைப்புகள் மற்றும் படங்களுடன் வரும் பல பதிவுகளை சமூக ஊடகங்களில் ஆங்காங்கே பார்க்க முடிகிறது.

இதேபோல, சில செடிகளை வைத்தால் பாம்பு வராது என்ற பேச்சுகளை அன்றாட வாழ்விலும் அவ்வப்போது கேள்விப்படுகிறோம்.

அதாவது, வெள்ளை நரிமிரட்டி அல்லது கிலுகிலுப்பைச் செடி, கருப்பு நரிமிரட்டி, நாகபாசி, காசுமரம் போன்ற தாவரங்கள் இருந்தால் பாம்புகள் வருவதில்லை என்ற கருத்துகளை மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

மறுபுறம், தாழை, மனோரஞ்சிதம் போன்ற தாவரங்கள் காணப்படும் இடங்களுக்கு அருகில் பாம்புகள் வரும் என்றும் கூறப்படுகிறது.

உண்மையில், பாம்புகளின் நடமாட்டத்திற்கும் செடிகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? வெள்ளை நரிமிரட்டி, நாகபாசி போன்ற செடிகள் இருந்தால் பாம்புகள் வராதா? மனோரஞ்சிதம் போன்ற தாவரங்கள் பாம்புகளை ஈர்க்கக் கூடியவையா?

By admin