9
மூத்த ஊடகவியலாளர் பாரதி இராசநாயகம் அவர்களின் ஓராண்டு நினைவேந்தலும் நினைவுமலர் வெளியீடும் சேர் .பொன் இராமநாதன் வீதி, ஹம்சியா மஹாலில் சனிக்கிழமை காலையில் இடம்பெற்றது (07.02.2026) ஊடக விரிவுரையாளர் எச்.தேவகௌரி நிகழ்வுக்கு தலைமை தாங்கினார் .
திருமதி தேவகி பாரதி , பாரதியின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை சூட்டினார் எழுத்தாளர் கணபதி சர்வானந்தா வரவேற்புரை நிகழ்த்தினார். டான் நிறுவுநர் சி. குகநாதன் , மூத்த பத்திரிகையாளரும் அ. நிக்சன், பேராசிரியர் சி. ரகுராம் தேசிய பசுமை இயக்கம் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் நினைவுரையாற்றினர்.
பாரதியின் சமூக,மனித நேய, அரசியல் பணிகளை ஆராத்தித் உரைகளிடை கௌரவ பிரதிகள் வழங்கப்பட்டன , பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் என், சண்முகலிங்கன் , பேராசிரியர் எஸ் .சிவலிங்கராஜா, திருவாளர் சி. திருவாகரன் ஆகியோர் பிரதிகளை வழங்கிவைத்தனர்.
சிறந்த தமிழ் ஊடகர்களுக்கு வருடாவருடம் ’பாரதி பெயரில் விருது வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிப்பும் வெளியானது.
