• Tue. Feb 10th, 2026

24×7 Live News

Apdin News

‘பாரதி: ஒரு மனித நேய ஊடகன்’ நினைவு நிகழ்வும் மலர் வெளியீடும்

Byadmin

Feb 10, 2026


மூத்த ஊடகவியலாளர் பாரதி இராசநாயகம் அவர்களின் ஓராண்டு  நினைவேந்தலும்  நினைவுமலர் வெளியீடும்   சேர் .பொன் இராமநாதன் வீதி, ஹம்சியா மஹாலில் சனிக்கிழமை காலையில் இடம்பெற்றது (07.02.2026) ஊடக விரிவுரையாளர் எச்.தேவகௌரி நிகழ்வுக்கு தலைமை தாங்கினார் .

திருமதி தேவகி பாரதி , பாரதியின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை சூட்டினார் எழுத்தாளர் கணபதி சர்வானந்தா வரவேற்புரை நிகழ்த்தினார். டான்  நிறுவுநர் சி. குகநாதன் ,  மூத்த பத்திரிகையாளரும்  அ. நிக்சன், பேராசிரியர் சி. ரகுராம் தேசிய பசுமை இயக்கம் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் நினைவுரையாற்றினர்.

பாரதியின் சமூக,மனித நேய, அரசியல் பணிகளை ஆராத்தித் உரைகளிடை கௌரவ பிரதிகள் வழங்கப்பட்டன , பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் என், சண்முகலிங்கன்  , பேராசிரியர்  எஸ் .சிவலிங்கராஜா,  திருவாளர் சி. திருவாகரன் ஆகியோர்  பிரதிகளை வழங்கிவைத்தனர்.

சிறந்த தமிழ் ஊடகர்களுக்கு வருடாவருடம் ’பாரதி பெயரில் விருது வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிப்பும் வெளியானது.

 

 

 

 

By admin