• Sat. Dec 27th, 2025

24×7 Live News

Apdin News

பாரத் டாக்ஸி: இந்திய அரசு அறிமுகப்படுத்தும் இந்த டாக்ஸி புக்கிங் செயலியால் என்ன மாற்றம் வரும்?

Byadmin

Dec 27, 2025


பாரத் டாக்ஸி, செயலிகள், இந்தியா, போக்குவரத்து, வாகன ஓட்டுநர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

நீங்கள் அவசரமாக எங்காவது செல்ல வேண்டியிருக்கும்போது, டாக்ஸி அல்லது ஆட்டோவை ஒரு செயலி மூலம் முன்பதிவு செய்ய முயன்றால், பல நேரங்களில் சாதாரண கட்டணத்தை விட அதிக கட்டணம் காட்டப்படுகிறது.

நீங்கள் நிச்சயமாக அந்த இடத்திற்குச் சென்றே ஆக வேண்டும் என்றால், தள்ளுபடி விலையிலும் டாக்ஸியை முன்பதிவு செய்யலாம், ஆனால் சில நேரங்களில் உங்கள் திட்டங்களை மாற்ற வேண்டியிருக்கும்.

மற்றொரு பக்கம், வாகன ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி உரிமையாளர்கள், ‘டாக்ஸி முன்பதிவு செயலிகள் தங்களது வருவாயில் இருந்து அதிக கமிஷனைப் பிடித்தம் செய்வதாகவும், உரிய நேரத்தில் பணம் வழங்கப்படுவதில்லை’ என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.

அதிகத் தேவையால் கட்டணம் அதிகரிக்கப்படும்போது, அந்தப் பலன்கள் ஓட்டுநர்களுக்கோ அல்லது கார் உரிமையாளர்களுக்கோ கிடைப்பதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்தியச் சந்தையில் ‘பாரத் டாக்ஸி’ (Bharat Taxi) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலே குறிப்பிட்ட இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதாக இந்தச் செயலி கூறுகிறது.

By admin