• Thu. Jan 22nd, 2026

24×7 Live News

Apdin News

பாலக் பனீர்: அமெரிக்காவில் இந்திய உணவுக்கு எதிராக ‘பாகுபாடு’ – இந்திய மாணவர்களுக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு

Byadmin

Jan 22, 2026


 ஊர்மி பட்டாச்சேரியாவும் ஆதித்ய பிரகாஷும்

பட மூலாதாரம், Urmi Bhattacheryya

படக்குறிப்பு, இனப் பாகுபாடு காட்டுவதாகக் கூறி ஊர்மியும் ஆதித்ய பிரகாஷும் வழக்கு தொடர்ந்தனர்.

மைக்ரோவேவ் ஓவனில் உணவைச் சூடாக்குவது தொடர்பாகத் தொடங்கிய சர்ச்சை, ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகத்திடமிருந்து இரண்டு இந்திய மாணவர்கள் 200,000 (1.83 கோடி ரூபாய்) டாலர் இழப்பீடு பெறும் முடிவை எட்டியது.

ஆதித்யா பிரகாஷ் மற்றும் அவரது வருங்கால மனைவி ஊர்மி பட்டாச்சார்யா ஆகியோர் “மைக்ரோவேவ் சம்பவம்” நடந்ததற்குப் பிறகு தொடர்ச்சியாக பாகுபாட்டை வெளிப்படுத்தும் கருத்துகள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொண்டதாகக் கூறி, போல்டரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்திற்கு எதிராக சிவில் உரிமைகள் வழக்கைத் தாக்கல் செய்ததாக பிபிசியிடம் கூறினர்.

பிரகாஷ் தனது மதிய உணவான பாலக் பன்னீரை (வட இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று) மைக்ரோவேவில் சூடாக்குவதற்கு பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் அதன் வாசனை காரணமாக எதிர்ப்பு தெரிவித்ததிலிருந்து இந்தத் துன்புறுத்தல் தொடங்கியதாக கூறி அந்த வழக்குத் தொடரப்பட்டது.

பிபிசி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அந்தப் பல்கலைக்கழகம், மாணவர்கள் முன்வைத்துள்ள பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் குறித்த குற்றச்சாட்டுகளின் “குறிப்பிட்ட சூழ்நிலைகள்” தொடர்பாக தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்தது.

அதே நேரத்தில், “அமெரிக்கச் சட்டங்களாலும் பல்கலைக்கழகக் கொள்கைகளாலும் பாதுகாக்கப்படும், அனைத்து பிரிவை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொண்ட சூழலை உருவாக்குவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும்” தெரிவித்தது.

By admin