• Thu. Sep 18th, 2025

24×7 Live News

Apdin News

பாலத்தீனம்: இஸ்ரேல் குண்டுவீச்சுக்கு நடுவே உயிர் தப்ப போராடும் மக்கள் – காஸாவில் என்ன நடக்கிறது?

Byadmin

Sep 18, 2025


இஸ்ரேல் - பாலத்தீனம், காஸா

பட மூலாதாரம், Anadolu via Getty Images

இஸ்ரேலிய ராணுவம் காஸா நகரை கட்டுப்பாட்டில் எடுக்கும் நோக்கில் தரை வழியில் பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முயற்சிக்கின்றன.

காஸா நகரின் ஷேக் ரத்வான் பகுதியைச் சேர்ந்த, மூன்று குழந்தைகளின் தாயான 32 வயது லினா அல்-மக்ரெபி, ஆபத்து இருந்தும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தார். ஆனால், ஒரு இஸ்ரேல் அதிகாரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனே வெளியேறுமாறு உத்தரவிட்டதால் அவர் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

“இடம்பெயர்வதற்கும் கூடாரம் வாங்குவதற்கும் என் நகைகளை விற்க வேண்டி வந்தது,” என்கிறார் லினா.

“கான் யூனிஸை அடைய 10 மணி நேரம் ஆனது. அந்த பயணத்திற்காக 3,500 ஷெக்கல்கள் (சுமார் 88,000 இந்திய ரூபாய்) செலுத்தினோம். கார்களும் லாரிகளும் முடிவில்லாமல் வரிசையாகச் சென்றன.”

By admin