‘நம்பிக்கை இழந்துவிட்டேன்’ – இஸ்ரேல் தாக்குதலில் காலை இழந்த புகைப்பட செய்தியாளர்
“நான் என்னை புகைப்பட செய்தியாளர் என அறிமுகப்படுத்திக் கொள்வேன். ஆனால், இப்போது நான் போரால் பாதிக்கப்பட்டவள் எனக் கூறுகிறேன்.
கேமரா முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவம் மூலம் என்னை மற்றவர்கள் அடையாளம் காண்பார்கள் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை” என்கிறார், ஏ.எஃப்.பி செய்தி முகமையின் புகைப்பட செய்தியாளர் கிறிஸ்டினா அஸி.
தெற்கு லெபனானில் அக்டோபர் 13, 2023-இல் இஸ்ரேல் படையினர் குண்டு வீசியதில் ஏழு செய்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதில், கிறிஸ்டினா அஸி தனது காலை இழந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு