• Wed. Jun 24th, 2026

24×7 Live News

Apdin News

பாலத்தீன குழந்தைகளை ‘இனப்படுகொலை செய்ததாக’ கூறும் ஐ.நா விசாரணை ஆணையம் – இஸ்ரேலின் பதில் என்ன?

Byadmin

Jun 24, 2026


வடக்கு காஸாவில் உள்ள ஷாதி அகதிகள் முகாமில், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, அழிக்கப்பட்ட தங்களது  வீட்டிலிருந்து பாலத்தீனியக் குழந்தைகள் வெளியே பார்ப்பதைக் காட்டும் கோப்புப் புகைப்படம் (29 அக்டோபர் 2025).

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, காஸா போரில் கொல்லப்பட்டவர்களில் சுமார் 30% பேர் குழந்தைகள் என ஐ.நா விசாரணை ஆணையம் கூறுகிறது

    • எழுதியவர், டேவிட் கிரிட்டன் & ஸ்டெஃபானி ஹெகார்டி
    • பதவி,
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

காஸா பகுதியில் பாலத்தீன குழந்தைகளை இஸ்ரேல் திட்டமிட்டுக் குறிவைத்துள்ளதாகவும், இதன் விளைவாக இனப்படுகொலை, மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் நிகழ்ந்து இருப்பதாகவும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் போர்க் குற்றங்கள் நடந்துள்ளதாகவும் ஐ.நா விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகளும், பாதுகாப்புப் படைகளும் “லட்சக்கணக்கான பாலத்தீன குழந்தைகளுக்கு மரணம் மற்றும் கடுமையான உடல், மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் செயல்களைத் திட்டமிட்டு மேற்கொண்டுள்ளன” என்றும், கடந்த அக்டோபர் மாத காஸா போர் நிறுத்தத்திற்குப் பிறகும் இந்த கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளதாகவும் ஒரு புதிய அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

இந்தச் செயல்கள் “காஸாவில் உள்ள பாலத்தீனர்களின் குழந்தைகளைக் குறிவைப்பது, அவர்களின் எதிர்காலத்தை அழிப்பதற்கான ஒரு திட்டமிட்ட உத்தியின் ஒரு பகுதி” என்று முடிவு செய்வதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக அந்த ஆணையம் கூறுகிறது.

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் இந்த ஆணையத்தின் அறிக்கையை “முற்றிலும் நிராகரிப்பதாக” தெரிவித்ததுடன், இதை ஒரு “அவதூறான போலி அறிக்கை” என்றும் “அதன் முந்தைய அறிக்கைகளைப் போலவே அதிர்ச்சியூட்டும் ஒரு பிரசார ஆவணம்” என்றும் கூறியுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் தலைமையில், அதற்கு முன்பில்லாத வகையில் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

By admin