1
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் பாலஸ்தீன நடவடிக்கையை தடை செய்வதாக இங்கிலாந்து உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் கூறியுள்ளார்.
ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள RAF பிரைஸ் நார்டனுக்குள் பாலஸ்தீன நடவடிக்கை குழு குழுவை சேர்ந்தவர்கள் நுழைந்து அங்கிருந்த இரண்டு இராணுவ விமானங்களுக்கு சிவப்பு வண்ணம் பூசிய சம்பவமானது “அவமானகரமானது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையான அந்தக் குழுவை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்துவதாக கூறிய அவர், இந்தத் தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் அதற்கு ஆதரவளிப்பவர்களாக கருதப்படுவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய இலண்டனில் இடம்பெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதுடன், பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல்களை அடுத்து, அவர்களில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்புடைய செய்தி : பாலத்தீன ஆதரவாளர்களால் இலண்டனில் அமைதியின்மை; ஈரான் தூதரகம் முன் வன்முறை!
இந்த நிலையில், குறித்த குழுவைத் தடை செய்வதற்கான தனது நோக்கத்தை அறிவித்த கூப்பர், பாலஸ்தீன நடவடிக்கை குழுவின் செயற்பாடுகள் 2024 முதல் அடிக்கடி மற்றும் தீவிரமாக அதிகரித்துள்ளது” என்றும் கூறினார்.
“இங்கிலாந்தின் பாதுகாப்பு நிறுவனம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதது, மேலும் அந்த பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துபவர்களை இந்த அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தத் தடை நிறைவேற்றப்பட்டால், அந்தக் குழுவில் சேர்வது அல்லது ஆதரிப்பது குற்றவியல் குற்றமாக மாறுவதுடன், 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.