• Sun. Nov 16th, 2025

24×7 Live News

Apdin News

“பாலில்லாமல் தயாரான ரசாயன நெய்” – திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் கசிந்த ஆவணங்கள்

Byadmin

Nov 16, 2025


திருமலை திருப்பதி, ஏழுமலையான் கோயில், லட்டு பிரசாதத்தில் கலப்படம், நெய்

பட மூலாதாரம், RAJESH

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் நெய் கலப்படம் செய்யப்பட்ட வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

“அவர்கள் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆறரை லட்சம் கிலோ ரசாயனங்களை வாங்கி, அதிலிருந்து தயாரிக்கப்பட்ட நெய்யை வழங்கினார்கள்” என்று கசியவிடப்பட்ட SIT ரிமாண்ட் அறிக்கையை சுட்டிக்காட்டி தெலுங்கு தேசம் (TDP) தலைவர் பட்டாபி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நெய், மோனோகிளசரைடு மற்றும் அசிட்டிக் அமில எஸ்தர் போன்ற ரசாயனங்களால் தயாரிக்கப்பட்டதாகவும், ஒரு லிட்டர் பால் கூட வாங்காமல் லட்சக்கணக்கான கிலோ நெய் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளைக் சுட்டிக்காட்டிய ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், “சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

“ரிமாண்ட் அறிக்கையில் எந்தவிதமான மோசடியும் நடந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை. அரசியலுக்காக சந்திரபாபு நாயுடு கடவுளையும் பயன்படுத்துகிறார்” என்று YSRCP தலைவர் சஜ்ஜலா ராமகிருஷ்ண ரெட்டி விமர்சித்துள்ளார்.

By admin