• Sun. Jun 22nd, 2025

24×7 Live News

Apdin News

பாவெல் துரோவ்: விந்தணு தானம் மூலம் பிறந்த 100 குழந்தைகளுக்கு சொத்தை வழங்கும் டெலிகிராம் நிறுவனர்

Byadmin

Jun 22, 2025


பாவெல் துரோவ், டெலிகிராம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாவெல் துரோவ், டெலிகிராம் நிறுவனர்

டெலிகிராம் ஆப்-ன் நிறுவனர் பாவெல் துரோவ், தனக்குப் பிறந்த நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு, தனது 13.9 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களைப் பகிர்ந்தளிப்பதாக தெரிவித்துள்ளார்.

“அவர்கள் எல்லோரும் என்னுடைய குழந்தைகள், எனது காலத்திற்குப் பிறகு அனைவருக்கும் ஒரே மாதிரியான உரிமைகள் இருக்கும்! அவர்களை பிரித்துப் பார்க்க நான் விரும்பவில்லை” என, லே பாயிண்ட் என்ற பிரான்ஸ் அரசியல் பத்திரிகையிடம் பாவெல் துரோவ் தெரிவித்தார்.

தனது மூன்று வெவ்வேறு துணைகள் மூலம் பிறந்த ஆறு குழந்தைகளுக்கு தான் “அதிகாரப்பூர்வ தந்தை” என்று பாவெல் துரோவ் கூறினார்.

“பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவருக்கு உதவுவதற்காக விந்தணு தானம் செய்யத் தொடங்கினேன். நான் செய்த விந்தணு தானம் மூலம், 12 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கருத்தரிக்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனை அண்மையில் என்னிடம் தெரிவித்தது” என்று அவர் தெரிவித்தார்.

By admin