• Mon. Nov 17th, 2025

24×7 Live News

Apdin News

பிகாரில் பாஜக பெற்ற வெற்றி ‘இந்தியா’ கூட்டணியை வலுப்படுத்தும் என்று சில நிபுணர்கள் கருதுவது ஏன்?

Byadmin

Nov 17, 2025


பிகார் தேர்தல், இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் வெற்றி, வேட்பாளர்கள், இந்தியா, அரசியல், காங்கிரஸ், சட்டமன்றத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற மகத்தான வெற்றி, நாட்டின் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மத்தியிலும் பெரும்பாலான மாநிலங்களிலும் பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜக, 2024 மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. ஆனால், 240 இடங்களை மட்டுமே வென்று சற்று பலவீனமடைந்தபோது, இந்திய அரசியலில் பாஜகவின் சரிவுக்கான நேரம் இது என பல அரசியல் நிபுணர்கள் கருதினார்கள்.

ஆனால், அதன் பின்னர் மேலும் உத்வேகத்துடன் நாட்டின் பல மாநிலங்களில் நடைபெற்றத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றபோது, பாஜகவைப் பற்றிய மதிப்பீடுகள் தவறோ என்றே அனைவரும் நினைத்தனர்.

மகாராஷ்டிராவில் 2024-ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் பாஜக, என்சிபி மற்றும் சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற பிரிவுகளுடன் சேர்ந்து மகாயுதி கூட்டணியின் கீழ் போட்டியிட்டது, அந்தக் கூட்டணி 288 இடங்களில் 235 இடங்களை வென்றது. இது மாநிலத்தில் எதிரணியான மகா விகாஸ் அகாடி கூட்டணியை பலவீனப்படுத்தியது.

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பொருளாதார ரீதியாக வலுவான மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் பாஜக மீண்டும் தனது பிடியை வலுப்படுத்தியது.

அதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தலில், மகாராஷ்டிராவின் 48 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக 9 இடங்களை மட்டுமே வென்றது, காங்கிரஸை உள்ளடக்கிய எதிரணி 30 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.

By admin