• Sat. Jun 20th, 2026

24×7 Live News

Apdin News

பிகார்: கணவரை அறையில் பூட்டிவிட்டு பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை

Byadmin

Jun 20, 2026


தலைமறைவாக உள்ளவர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், SANTOSH KUMAR

படக்குறிப்பு, தலைமறைவாக உள்ளவர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

    • எழுதியவர், பிரீதி பிரபா
    • பதவி, செய்தியாளர், பிபிசி ஹிந்தி, பேகுசாராய்.
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)

பிகாரின் பேகுசாராய் மாவட்டத்தில் 28 வயது பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரின் படி, ஜூன் 11-ஆம் தேதி இரவு சிமரியா காட் பகுதியில் 28 வயதுடைய அந்தப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணின் கணவர், மருத்துவப் பரிசோதனையின்போது பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்து தோட்டா, கல் மற்றும் மரத்துண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அடையாளம் தெரியாத இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

By admin