• Mon. Nov 17th, 2025

24×7 Live News

Apdin News

பிகார் தேர்தல்: புதிய அரசின் முன்பு உள்ள ஆறு முக்கிய சவால்கள் என்னென்ன ?

Byadmin

Nov 17, 2025


நிதிஷ் குமார்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சரானால், பிகாரின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை வேகப்படுத்துவதற்காக பல முக்கிய பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிகாரில், தற்போதைய முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளாக பிகாரில் அடிப்படை உள்கட்டமைப்பு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பெண்கள் மேம்பாட்டில் நிதிஷ் குமார் பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இந்த மாற்றங்களின் காரணமாக அவர் ‘சுஷாசன் பாபு’ என்றும் அறியப்படுகிறார்.

ஆனால், பிகார் இன்னும் நாட்டின் மிகப் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாகவே உள்ளது.

நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சரானால், பிகாரின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை வேகப்படுத்துவதற்காக பல முக்கிய பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிகார் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என்ன என்பதையும், புதிய அரசாங்கம் எந்தெந்த துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் பார்ப்போம்.

By admin