• Thu. Aug 6th, 2026

24×7 Live News

Apdin News

பிரசாந்த் கிஷோர்: பாங்கிபூரில் தனது வெற்றிக்கு அவர் கூறிய 2 காரணங்கள் என்ன?

Byadmin

Aug 6, 2026


பிரசாந்த் கிஷோர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிஹாரின் பாங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் வெற்றி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பிஹாரின் பாங்கிபூர் தொகுதியில் பெரிதும் பேசப்பட்ட இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார்.

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, இந்தத் தொகுதி காலியானது.

பாட்னாவின் நகர்ப்புறப் பகுதியில் அமைந்துள்ள இத்தொகுதி பா.ஜ.க-வின் கோட்டையாகக் கருதப்பட்டது. ஆனால், இம்முறை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் காட்டுகின்றன.

பிரசாந்த் கிஷோர், தனது நெருங்கிய போட்டியாளரான பா.ஜ.க-வின் நீரஜ் குமாரை 19,324 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பிரசாந்த் கிஷோர் 64,151 வாக்குகளையும் (49.2%), நீரஜ் குமார் 44,827 வாக்குகளையும் பெற்றனர்.

By admin