• Mon. Feb 9th, 2026

24×7 Live News

Apdin News

பிரதமர் பதவி விலக வேண்டும் என தொழிற்சங்கத் தலைவர்கள் அழுத்தம்

Byadmin

Feb 9, 2026


இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என தொழிற்சங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய விவகாரத்தில் மண்டேல்சனின் உறவு, தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு அரசியல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.

மண்டேல்சனை அமெரிக்க தூதராக நியமிக்க ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படும் மோர்கன் மெக்ஸ்வீனி தனது பதவியில் இருந்து விலகியதையடுத்து, தற்போது பிரதமர் ஸ்டார்மரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

குறிப்பாக தீயணைப்பு துறை தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டீவ் ரைட், நாட்டில் மாற்றம் தேவைப்படுவதாகவும், வாக்காளர்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் இதுவரை நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் தனது அரசாங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆலோசனையை பெறாமல், தவறான முடிவுகளை எடுக்கும் குறைந்த குழுவின் கருத்துகளைப் பின்பற்றுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை RMT போக்குவரத்து தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் எடி டெம்ப்சியும் இந்தக் கோரிக்கையை ஆதரித்து, ஸ்டார்மர் தொழிலாளர் வர்க்க வாக்காளர்களை விலக்கி வைக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார். தொழிற்சங்க தலைவர்களும் பணியாளர் பிரதிநிதிகளும் இணைந்து பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருவது அரசியல் நிலைமையில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

By admin