• Tue. Feb 3rd, 2026

24×7 Live News

Apdin News

பிராச்சி கொண்டமங்கலே: பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட ‘மகளை கொன்ற தந்தை’- என்ன நடந்தது?

Byadmin

Feb 3, 2026


மூன்று குழந்தைகள் இருந்தால் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் தந்தை ஒருவர் தனது மகளைக் கொலை செய்துள்ளார் என நிஜாமாபாத் போலீசார் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, பிராச்சி கொண்டமங்கலே

குறிப்பு: இந்தச் செய்தியில் உள்ள விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

மூன்று குழந்தைகள் இருந்தால் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் தந்தை ஒருவர் தனது மகளைக் கொலை செய்துள்ளார் என தெலங்கானாவின் நிஜாமாபாத் போலீசார் தெரிவித்தனர்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாண்டுரங்க கொண்டமங்கலே என்பவர் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆறு வயது மகள் பிராச்சி கொண்டமங்கலே தெலங்கானா பகுதிக்கு அழைத்து வரப்பட்டு கொலை செய்யப்பட்டதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்த விவரங்களை நிஜாமாபாத் காவல்துறை ஆணையர் பி. சாய் சைதன்யா பிப்ரவரி 2-ஆம் தேதி ஊடகங்களுக்கு விளக்கினார்.

கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை உடல்

தெலங்கானாவின் ஏடப்பள்ளி நிஜாம்சாகர் கால்வாயில் சிறுமியின் உடல் இருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

By admin