• Sat. Jun 14th, 2025

24×7 Live News

Apdin News

பிரான்ஸில் ஆசிரியரை கத்தியால் குத்திக்கொன்ற மாணவன்!

Byadmin

Jun 11, 2025


பிரான்ஸில் உதவி ஆசிரியரை, மாணவன் ஒருவன் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த உதவி ஆசிரியருக்கு வயது 31 ஆகும்.

மாணவர்கள் பாடசாலைக்கு வந்தபோது, மாணவர்களுடைய பைகளை உதவி ஆசிரியர் சோதனை செய்துகொண்டிருந்த போது, மேற்படி மாணவன் அவரை கத்தியால் குத்தியுள்ளான்.

இந்தச் சம்பவத்துக்குப் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கடும் கண்டனம் தெரிவித்தார். “நம் பிள்ளைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உதவி ஆசிரியர் கொடூரமாக உயிரிழந்தார்” என்று அவர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நாட்டில் குற்றங்களைக் குறைக்க அரசாங்கம் மும்முரமாகச் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.

By admin