• Tue. Oct 22nd, 2024

24×7 Live News

Apdin News

பிரிக்ஸ்: இந்தியா-சீனா இடையே எல்லை ரோந்து ஒப்பந்தம் – உறவுகள் சுமுகம் ஆகின்றனவா?

Byadmin

Oct 22, 2024


இந்தியா- சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இந்தியாவும் சீனாவும் எல்லை கட்டுப்பாடு கோடு (Line of Actual Control – LAC) பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன.

அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோதி புறப்படுவதற்கு முன்னதாக, திங்களன்று (அக்டோபர் 21) இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இந்தியா-சீனா உறவுகளைக் கண்காணித்து வரும் சில வல்லுநர்கள், கடந்த காலங்களிலும் சீனாவுடன் இதுபோன்ற ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கருதுகின்றனர்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சீனாவில் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை என்றாலும், இந்த முயற்சி இந்திய – சீன உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாகச் சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

By admin