• Wed. Mar 26th, 2025

24×7 Live News

Apdin News

பிரிட்டன் செல்ல முயன்று விசா மோசடிகளில் சிக்கித் தவிக்கும் கேரள செவிலியர்கள் – என்ன நடந்தது?

Byadmin

Mar 21, 2025


பிரிட்டன், பராமரிப்புப் பணியாளர்கள், விசா, கேரளா, இந்தியர்கள்

பட மூலாதாரம், Vishnu Vardhan

படக்குறிப்பு, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அருண் ஜார்ஜ், இந்த மோசடி தன்னை நிதி ரீதியாகக் குறைந்தது பத்தாண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகக் கூறுகிறார்

அருண் ஜார்ஜ், 15,000 பவுண்டுகள் (இந்திய ரூபாயில் 16 லட்சத்தி 78 ஆயிரம்) சேமிப்பதற்காகத் தனது வாழ்க்கையின் பாதி காலம் முழுவதும் கடுமையாக உழைத்துள்ளார்.

அவ்வாறு சேமித்த பணத்தை, பிரிட்டனில் தனது மனைவிக்கு பராமரிப்புப் பணியாளர் வேலை கிடைப்பதற்காக முழுமையாகப் பயன்படுத்தினார் ஜார்ஜ். ஆனால் ஒரு சில மாதங்களில் அவர் மொத்த பணத்தையும் இழந்துள்ளார்.

ஜார்ஜ் என்பது அவரது உண்மையான பெயர் அல்ல. வேலை இல்லாமல் நாடு திரும்பியது அவர்களுக்குப் பெரும் அவமானமாகக் கருதப்படுவதால், அவர்களின் சிறிய சமூகத்தில் அவரது மனைவி அடையாளம் காணப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.

கடந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில், அவர் அல்சிட்டா கேர் நிறுவன மேலாளர்களுக்கு பிரிட்டன் செல்வதற்கான தொகையைச் செலுத்தினார்.

By admin