• Wed. Oct 9th, 2024

24×7 Live News

Apdin News

பிரிட்டன்: வேலைக்கு விண்ணப்பித்த பெண்மணிக்கு 48 ஆண்டுகளுக்கு பின்பு பதில் கிடைத்துள்ளது

Byadmin

Oct 9, 2024


48 ஆண்டுகளுக்கு பின்பு பதில் கிடைத்துள்ளது
படக்குறிப்பு, டிஸி ஹாட்சன்

தனது கனவு வேலைக்கான விண்ணப்பத்திற்கு ஏன் இன்னும் பதில் வரவில்லை என்று 48 ஆண்டுகளாக யோசித்து கொண்டிருந்த பெண் ஒருவர் அதற்கான காரணத்தை இறுதியாக கண்டுபிடித்துள்ளார்.

பிரிட்டனின் லிங்கன்ஷரில் உள்ள கெட்னி ஹில் பகுதியில் 70 வயதான டிஸி ஹாட்சன் வசித்து வருகிறார். தனது தபால் பெட்டியை அவர் திறந்து பார்த்த போது, 1976-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் ரைடர் வேலைக்காக அவர் விண்ணபித்து இருந்த கடிதம் இருந்தது.

இத்தனை ஆண்டுகளாக இந்த கடிதம், தபால் அலுவலகத்தில் உள்ள டிராயருக்கு பின்னால் சிக்கி இருந்தது. அதை தபால் நிலையம் கண்டறிந்து டிஸி ஹாட்சனுக்கு தற்போது அனுப்பி உள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த வேலை அவருக்கு கிடைக்காமல் இருந்த போதிலும், இதற்காக அவர் சோர்வு அடையாமல், வேறு வேலை தேடினார். அதில் ஒரு வேலை கிடைத்து, அவர் உலகம் முழுவதும் பயணித்து ஒரு துணிச்சலான வாழ்க்கையை வாழ்ந்தார்.



By admin