• Sun. Nov 2nd, 2025

24×7 Live News

Apdin News

பிரெஞ்சு மன்னர்களின் நகைகளை அலங்கரித்த இந்திய வைரங்கள் பாரிஸை அடைந்த சுவாரஸ்ய கதை

Byadmin

Nov 1, 2025


கிரீடங்கள், சங்கிலிகள், காதணிகள், ப்ரூச்சுகள், லூவர்  அருங்காட்சியகக் கொள்ளை,  இந்திய வைரங்கள்

பட மூலாதாரம், Louvre Museum

படக்குறிப்பு,

பிரபலமான பண்டைய வைரங்கள் பற்றி பேசப்படும்போது அவற்றில் பல இந்திய மண்ணுடன் தொடர்புடையவையாகவே இருக்கின்றன. கோல்கொண்டா வைரங்களும், அவற்றின் கருவறையான ஆந்திரச் சுரங்கங்களும் சரித்திரப் புகழ் பெற்றவை.

பிரான்சின் லூவர் அருங்காட்சியத்தில் அண்மையில் திருடப்பட்ட பல வைரங்களும் இன்றைய ஆந்திரா மற்றும் தெலங்கானாவுடன் தொடர்புடையவை. கோல்கொண்டா வைரங்களும் திருடப்பட்டனவா என்ற கேள்விகளும் எழுகின்றன.

இந்த நிலையில், கோல்கொண்டா மற்றும் பரிதாலாவிலிருந்து பாரிஸுக்கு வைரங்கள் சென்றது எப்படி என்ற பின்னணியை தெரிந்துக்கொள்வோம்.

ஏறக்குறைய 18-ஆம் நூற்றாண்டு வரை, உலகுக்கு வைரங்களை வழங்கும் ஒரே நாடாக இந்தியா இருந்தது. இன்றைய ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் பெண்ணை நதிப் பகுதிகளில் வைரங்கள் ஏராளமாகக் கிடைத்தன.

தெலுங்கு நிலங்களை ஆட்சி செய்த விஜயநகரம் மற்றும் கோல்கொண்டா ராஜ்ஜியங்கள் மிகவும் சக்திவாய்ந்த பேரரசுகளாக மாறின. அவை, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வைரங்களை வெட்டி எடுத்து, விற்று, வர்த்தகம் செய்து வந்தன.



By admin