• Fri. May 30th, 2025

24×7 Live News

Apdin News

பிரேசிலில் ஒரு கிராமத்தையே பாதித்த அரிய வகை நோய் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

Byadmin

May 29, 2025


சில்வானா சாண்டோஸ்

பட மூலாதாரம், Mariana Castiñeiras/Caroline Souza

படக்குறிப்பு, செரின்ஹா டோஸ் பிண்டோஸ் எனும் நகரில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மரபியல் நிபுணர் சில்வானா சாண்டோஸ் அங்கு வரும் வரை, தங்களது நோய் குறித்து அறியாமல் வாழ்ந்து வந்தனர்.

  • எழுதியவர், கியூலியா கிராஞ்சி மற்றும் வைட்டர் டாவரெஸ்
  • பதவி, பிபிசி பிரேசில் செய்தியாளர்கள், செரின்ஹா டோஸ் பிண்டோஸிலிருந்து

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தான் சென்ற ஒரு சிறிய நகரத்தைச் சில்வானா சாண்டோஸ் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்.

அங்கு, குழந்தைகள் பலர் நடக்க முடியாத நிலையில் இருந்தனர்.

நகருக்குள் நுழையும்போது அங்கே பார்த்த லோலோவின் மகள்கள், சாலையின் முடிவில் ரெஜேன், பெட்ரோல் நிலையத்தை தாண்டியதும் பார்த்த மார்க்வின்ஹோஸ், பள்ளிக்கு அருகில் பவுலின்ஹா எனப் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

வடகிழக்கு பிரேசிலின் தொலைதூரப் பகுதியில், ஐந்தாயிரத்திற்கும் குறைவான மக்கள் வசிக்கும் சிறுநகரம் தான் ‘செரின்ஹா டோஸ் பிண்டோஸ்’.

By admin