• Wed. Nov 26th, 2025

24×7 Live News

Apdin News

பிரேமா வாங்கியோம் தோங்டாக்: இந்திய பெண் பாஸ்போர்ட் விவகாரத்தால் இந்தியா – சீனா இடையே சர்ச்சை ஏன்?

Byadmin

Nov 26, 2025


அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண், இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் சீன குடியேற்ற அதிகாரிகளால் பல மணி நேரம் துன்புறுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிரேமா வாங்கியோம் தோங்டாக்

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரேமா வாங்கியோம் தோங்டாக் என்ற பெண் ஒருவர், இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் சீன குடியேற்ற அதிகாரிகளால் பல மணி நேரம் துன்புறுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.

தனது பாஸ்போர்ட் செல்லாது என்று தனக்குச் சொல்லப்பட்டதாகவும் அப்பெண் கூறுகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதுபோன்ற சம்பவம் எந்த ஒரு குடிமகனுக்கும் நடக்கக்கூடாது என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, இந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது சர்வதேச சட்டத்தை மீறுகிறது என்றும் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்த அதே நாளில் (நவம்பர் 21) இந்திய அரசு பெய்ஜிங்கிலும் டெல்லியிலும் சீனத் தரப்பிற்கு வலுவான எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக பிபிசிக்கு தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

By admin