• Mon. Mar 3rd, 2025

24×7 Live News

Apdin News

பிளாஸ்டிக் தாளில் வேக வைத்த இட்லியால் புற்றுநோய் ஆபத்து – கர்நாடக கடைகளில் திடீர் சோதனை

Byadmin

Mar 2, 2025


ப்ளாஸ்டிக் தாளில் இட்லி, புற்றுநோய் அபாயம், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

உணவகங்களுக்குச் செல்லும் போது இட்லி மிகவும் பாதுகாப்பான உணவாக பலராலும் எப்போதும் நம்பப்படுகிறது. ஆனால் கர்நாடக அரசு, வெறும் இட்லியில் புற்றுநோயை உருவாக்கும் நச்சுத்தன்மை இருப்பதை கண்டறிந்துள்ளது.

241 உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது 52 உணவகங்களில் துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்கள் மீது இட்லி மாவு ஊற்றி இட்லி சமைக்கப்பட்டதை அம்மாநிலத்தின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

பொதுவாக, இட்லியை நீராவியில் வேக வைக்க, இட்லி தட்டில் சுத்தமான துணியை பயன்படுத்துவார்கள். ஆனால் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை நடத்திய திடீர் சோதனையில், சில சாலையோர கடைகள் மற்றும் உணவகங்களில் இட்லி அவிக்க துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இந்த பிளாஸ்டிக் தாள்கள் கார்சினோஜென்ஸ் (carcinogens) எனப்படும் புற்றுநோய் காரணியை உருவாக்கும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மருத்துவர்கள் கூறுவது என்ன?

“தரமற்ற பிளாஸ்டிக் தாள்கள் உயர் வெப்பநிலையில் உருகும் போது, அதில் உள்ள நச்சுகள் இட்லிக்குள் சென்றுவிடுகின்றன. பாரம்பரியமாக இட்லிக்கு பயன்படுத்தும் துணிகளில் இதுபோன்ற நச்சுத்தன்மை உருவாவதில்லை,” என்று மருத்துவர் யூ.எஸ். விஷால் ராவ் தெரிவிக்கிறார். எச்.சி.ஜி. புற்றுநோய் மையத்தின் டீனான அவர் பிபிசி ஹிந்தியிடம் இதுகுறித்து பேசினார்.

By admin