இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் வீட்டு உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும் பீரோ லாக்கரில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைப்பதற்காக கொண்டு வந்த இரும்பு ராடையும், உடைத்த கேட்டையும் சரவணன் வீட்டின் அடுப்பறையில் வைத்து விட்டு சென்றுள்ளனர்.