• Sun. Oct 19th, 2025

24×7 Live News

Apdin News

புதுச்சேரி மக்கள் தமிழ்நாடு வர ‘விசா’ பெற வேண்டியிருந்தது பற்றி தெரியுமா?

Byadmin

Oct 18, 2025


புதுச்சேரி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ.நந்தகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

1954-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி காலை புதுச்சேரியின் கீழூர் கிராமத்தில் ஒரு கொட்டகையில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர். அது ஒரு சாதாரண கிராம கூட்டம் இல்லை, புதுச்சேரியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு வாக்கெடுப்பு அங்கு நடந்தது.

பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரி இந்தியாவுடன் இணைய வேண்டுமா, வேண்டாமா என்ற வாக்கெடுப்பு கீழூர் கிராமத்தில் நடந்தது.

புதுச்சேரி பல நூற்றாண்டுகளாக பிரான்ஸ் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பிரெஞ்சுக்காரர்கள் முதன்முதலில் 1673-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்தனர். பின்னர் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளையும் வாங்கியது.

இந்தியாவுக்கு 1947-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் சுதந்திரம் அளித்தபோது பிரான்ஸ் வசம் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை.



By admin