• Tue. Sep 16th, 2025

24×7 Live News

Apdin News

புதைத்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் அழியாத உடல்கள் – காரணம் அறிவியலா அல்லது மதமா?

Byadmin

Sep 16, 2025


புதைத்து பல ஆண்டுகள் ஆகியும் சில உடல்கள் அழுகாமல் இருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தடயவியல் ஆய்வு செய்யப்படும் சடலம் (சித்தரிப்புப் படம்)

பெரும்பாலும் ஒருவர் இறந்தபிறகு அவரை புதைப்பதற்கு அல்லது இறுதிச் சடங்குகளை செய்வதற்கு சிறிது நேரம் எடுக்கும்.

முன்பெல்லாம் கோடைக் காலத்தில் ஒருவர் இறக்கும்போது, இறந்தவரின் உடல் சாக்கு துணியில் மூடப்படும். ஆனால் இப்போது குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட வாகனங்கள் அதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

பதப்படுத்தப்பட வேண்டிய சடலங்கள், குறைவான வெப்பநிலையில் வைக்கப்படுவதன் மூலம் அவை விரைவில் அழுகாமல் இருக்கின்றன.

அறிவியலின்படி, ஒருவர் இறந்தபிறகு சடலத்தின் மீது பாக்டீரியாக்கள் வளருகின்றன. உடல் அழுகுவதற்கு முக்கிய காரணம் இதுதான். வழக்கமாக, இறந்து 12 மணிநேரம் கழித்து உடல் அழுக ஆரம்பிக்கிறது.

By admin