• Sun. Sep 21st, 2025

24×7 Live News

Apdin News

புனைவு வரலாற்றை தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும்: மத்திய தொல்லியல் துறை இயக்குநர் கருத்து | Historical fiction must be refuted with archaeological evidence

Byadmin

Sep 21, 2025


மதுரை: புனைவு வரலாற்றை தொல்​லியல் ஆதா​ரங்​களால் முறியடிக்க வேண்​டும் என்று மத்​திய தொல்​லியல் துறை இயக்​குநர் அமர்​நாத் ராமகிருஷ்ணா கூறி​னார்.

தமிழ்​நாடு முற்​போக்கு எழுத்​தாளர் கலைஞர்​கள் சங்​கம் (தமுஎகச) சார்​பில் சிந்​து​வெளி நாகரி​கம் உலகுக்கு அறிவிக்​கப்​பட்ட நூற்​றாண்டு நிறைவு கருத்​தரங்​கம் மதுரை விராட்​டிபத்​தில் நேற்று நடை​பெற்​றது. மாநில செயற்​குழு உறுப்​பினர் ச.தமிழ்ச்​செல்​வன் தலைமை வகித்​தார். மாநிலத் தலை​வர் மதுக்​கூர் ராமலிங்​கம் முன்​னிலை வகித்​தார். சிந்​து​வெளி ஆய்​வாள​ரும், முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி​யு​மான ஆர்​.​பால​கிருஷ்ணன், சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் ஆதவன் தீட்​சண்யா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

இதில் மத்​திய தொல்​லியல் துறை இயக்​குநர் அமர்​நாத் ராமகிருஷ்ணன் பேசி​ய​தாவது: கடவுள் நாகரி​கத்தை படைக்​க​வில்​லை. மனிதர்​கள்​தான் நாகரி​கத்தை படைத்​துள்​ளனர். தற்​போது நாகரி​கம் பற்​றிய புனை​வுக் கதைகளைத்​தான் வரலாறாகப் பார்த்​துக் கொண்​டிருக்​கிறோம். ஆதா​ரங்​கள் அடிப்​படை​யில் கட்​டமைக்​கப்​படு​வது​தான் வரலாறு. கீழடி அகழாய்வு குறித்து இன்​னும் முழு​மை​யான அறிக்​கையை நான் அளிக்​க​வில்​லை. அதற்​குள் அண்ணா பல்​கலைக்​கழக மாணவர்​கள் மணலூர் கீழடியை மகா​பாரதத்தை தொடர்​புபடுத்தி புனைவு நூலாக்​கி​யுள்​ளனர்.

புனைவு வரலாற்றை தொல்​லியல் ஆதார வரலாற்​றால் முறியடிக்க வேண்​டும். வரலாற்றை புனை​வு​களோடு கட்​டமைக்​கலாம். அதை தொல்​லியல் சான்​றாககட்​டமைக்க முடி​யாது. சங்க இலக்​கி​யங்​கள் மனித இலக்​கி​யங்​களை பேசும் மகத்​தான இலக்​கியங்க​ளாகும். கீழடி அகழாய்வு அறிக்​கையை மாற்ற வேண்​டும் என்​றனர், அதை மறுத்து விட்​டேன். கீழடி அறிக்கை வெளிவ​ராத​தால், அந்த வரலாற்றை மக்​களுக்கு எடுத்​துச் சொல்​ல​ முடிய​வில்​லை.

காஞ்​சிபுரத்​தில் சென்னை பல்​கலைக்​கழக மாணவர்​களால் 1975-82-ம் ஆண்டு வரை 7 ஆண்​டு​கள் அகழாய்வு செய்த அறிக்​கையை இன்​னும் முழு​மை​யாக வெளி​யிட​வில்​லை. தமிழகம் முழு​வதும் கிடைத்த கருப்பு சிவப்பு நிற பானை ஓடு காஞ்​சிபுரத்​தில் மட்​டும் கிடைக்​காதது முக்​கிய செய்​தி. அதற்கு காரணம் காஞ்​சிபுரம் சங்க கால நகரம் கிடை​யாது. மக்​களுக்கு தெரியப்​படுத்​தி​ய​தால்​தான் கீழடி வாழ்ந்து கொண்​டிருக்​கிறது.

அகழாய்வு குறிப்புகள்…காஞ்​சிபுரம் பற்​றிய அறிக்கை வந்​திருந்​தால் வரலாற்று பார்வை மாறி​யிருக்​கும். மொழியை காப்​பாற்​றிக் கொண்டு வாழ்​பவர்​கள் தமிழர்​கள். இன்று வரை சங்க இலக்​கி​யங்​களை தொல்​லியல் எச்​சங்​களோடு ஒப்​பிட​வில்​லை. புனை​வு​கள் வரலாறு ஆகாது. தமிழகத்​தின் பல அகழாய்​வு​ குறிப்​பு​கள் மக்​களுக்கு சென்று சேர​வில்​லை. சேர்ந்​தால்​தான் வரலாற்​றின் உண்​மைத்​தன்மை புரி​யும். இவ்​வாறு அவர் பேசி​னார்.



By admin