• Fri. Feb 7th, 2025

24×7 Live News

Apdin News

புரட்சித் தலைவி வழியில் புரட்சித் தமிழர்! – கோவையில் இருந்து பரப்பு​ரையைத் தொடங்கும் பழனிசாமி | about edappadi palanisamy election campaign was explained

Byadmin

Feb 7, 2025


2010-ல் திமுக ஆட்சியை வீழ்த்து​வதற்கான தனது வியூகப் பயணத்தை கோவையி​லிருந்து தான் தொடங்​கினார் ஜெயலலிதா. அவரது வழியைப் பின்பற்றி அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமியும் ஆட்சிக்கு எதிரான தேர்தல் பரப்புரையை கோவையி​லிருந்தே தொடங்​கு​கிறார். 2006-11 திமுக ஆட்சியில் மின்வெட்டை கண்டித்​தும், அத்தி​யா​வசியப் பொருட்​களின் விலை உயர்வை கண்டித்தும் 2010-ல் கோவை வஉசி மைதானத்தில் அதிமுக பிரம்​மாண்ட ஆர்ப்​பாட்​டத்தை நடத்தியது.

சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்ற அந்த ஆர்ப்​பாட்​டத்​துக்கு ஜெயலலிதாவே தலைமை தாங்கி​னார். ஆர்ப்​பாட்​டத்தில் திமுக அரசுக்கு எதிராக கடுமையான விமர்​சனங்களை எடுத்து​வைத்துப் பேசி அதிமுக தொண்டர்​களுக்கு உத்வேகம் அளித்தார் ஜெயலலிதா. கோவையில் தொடங்கிய இந்தப் பயணத்தை மற்ற மாவட்டங் களுக்கும் விரிவுபடுத்திய அவர், இதை தேர்தல் பிரச்​சாரப் பயணமாகவே மாற்றிக்​கொண்​டார். 2011-ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்கு ஜெயலலி​தாவின் மாவட்ட வாரியான இந்த ஆர்ப்​பாட்​டங்களே அடித்தளம் அமைத்தன.

2011-ல் சட்டப்​பேரவை தேர்தல் பிரச்​சா​ரத்​தையும் சென்டிமென்டாக கோவை வஉசி மைதானத்​திலிருந்தே தொடங்​கினார் ஜெயலலிதா. அவரது பாணியில் கோவையி​லிருந்தே தனது தேர்தல் பிரச்​சாரப் பயணத்தை தொடங்​கு​கிறார் பழனிசாமி. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 2 இடங்கள் வீதம் கோவையின் 10 தொகுதிக்கும் சேர்த்து மொத்தமாக 20 இடங்களில் 3 நாட்கள் சுற்றுப்​பயணம் செய்து மக்களைச் சந்திக்க திட்ட​மிட்​டிருக்​கிறார் பழனிசாமி.

பிப்ரவரி முதல் வாரத்தில் திட்ட​மிடப்பட்ட அவரது இந்தப் பயணம் தேதி அறிவிக்​கப்​ப​டாமல் ஒத்திவைக்​கப்​பட்​டுள்ளது. அதற்கு முன்னதாக, அத்திக்கடவு – அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமல்படுத்​தி​யதற்காக பிப்ரவரி 9-ம் தேதி அன்னூரில் பழனிசாமிக்கு பாராட்டு விழா எடுக்​கிறார்கள். இதையும் பிரமாதப்​படுத்திக் காட்ட அதிமுக தரப்பில் தயாராகி வருகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்​பாளர் பேராசிரியர் கல்யாணசுந்​தரம், “கோவையில் தொடங்கும் புரட்சித் தமிழர் பழனிசாமியின் பிரச்​சாரப் பயணம் மாநில அளவில் பேசு பொருளாக மாறும். கட்சி​யினர் மத்தி​யிலும் பொதுமக்கள் மத்தி​யிலும் ஒரு புதிய நம்பிக்கையை விதைக்​கும். அன்னூர் பாராட்டு விழாவிலும், கோவை சுற்றுப் பயணத்​திலும் திரளப் போகும் மக்களின் பெரும் திரட்​சி​யானது மீண்டும் அதிமுக அதிகாரத்​துக்கு வருவதற்கான முன்னறி​விப்பாக இருக்​கும்.

2010-ல் கோவையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற பிரம்​மாண்ட ஆர்ப்​பாட்டம் எவ்வாறு கட்டியம் கூறியதோ, அதே மாதிரி பெரும் தொடக்​கத்தை பழனிசாமியின் கோவை சுற்றுப் பயணம் தரும். நிர்வாகத் திறனற்ற திமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்​துள்ளது. சட்டம் – ஒழுங்கு சீர்கெட்​டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்​துள்ளன. இத்தனை ஓட்டைகளை வைத்துக் கொண்டு 200 தொகுதி​களில் வெற்றி என கனவு காண்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவரது கனவை புரட்சித் தமிழர் பழனிசாமியின் சுற்றுப் பயணம் நிச்சயம் தகர்க்​கும்” என்றார்.

இம்முறை கோவை மாவட்​டத்தில் திமுக கொடியை நாட்டிவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்​கிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்காக கடந்த நவம்பர் மாதமே கோவையில் கள ஆய்வை​யும், கட்சி நிர்வாகி​களுடனான ஆலோசனைக் கூட்டத்​தையும் நடத்தி​னார். அந்தவிதத்தில், 200 தொகுதி​களில் வெற்றி என்று சொல்லிவரும் அவரும் கோவையி​லிருந்தே தனது தேர்தல் பரப்பு​ரையைத் தொடங்​கி​னார். அடுத்ததாக கோவை சென்டிமென்​டுடன் பழனிசாமியும் வருகிறார். ​யாருடைய கனவு நன​வாகிறது என்று ​பார்​க்​கலாம்!



By admin