• Fri. Jun 6th, 2025

24×7 Live News

Apdin News

பெங்களூருவில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் நெரிசல்

Byadmin

Jun 4, 2025


பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே குவிந்த ரசிகர்கள்

பட மூலாதாரம், IDREES MOHAMMED/AFP via Getty Images

ஐபிஎல் 2025 கோப்பையை முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதையடுத்து, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வீரர்களை கௌரவிக்க அரசு சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர்.

மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 10 பேர் இறந்திருக்கலாம் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி இந்திக்கு தெரிவித்துள்ளார்.

அங்கிருந்து வெளியான புகைப்படங்களில், ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்துவதையும் காண முடிந்தது.

இது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டங்களைக் காணவிருந்த மக்கள் இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தது மிகவும் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

By admin