• Fri. Jun 6th, 2025

24×7 Live News

Apdin News

பெங்களூரு கூட்ட நெரிசல்: திருப்பூர் பள்ளி தாளாளரின் ஒரே மகள் என்ன ஆனார்?

Byadmin

Jun 5, 2025


பெங்களூரு கூட்ட நெரிசல், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம்

பட மூலாதாரம், GettyImages and BBC

படக்குறிப்பு, பெங்களூரூவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 29 பெண் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
  • பதவி, பிபிசி தமிழ்

பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகள் காமாட்சி நண்பர்களுடன் ஆர் சி பி வெற்றி விழாவை காண சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பை அவரது குடும்பத்தினர் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவரது உடல் இன்று (ஜூன் 5) பெங்களூருவிலிருந்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.

பெங்களூருவில் ஆர் சி பி அணியினரின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர், 33 பேர் காயமடைந்துள்ளனர் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

By admin