தமிழகத்தை 4 மண்டலங்களாகப் பிரித்து மண்டலம் வாரியாகச் சென்று, இயக்க பணி, மக்கள் பணி, கூட்டணி என்று செயலாற்றி, வரும் தேர்தலில் வெல்லக்கூடிய சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதிமுக பொதுச்செயலாளரை இன்று நேரடியாக சந்தித்து அரசியல் பயணங்கள், பிரகாச
மான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்தேன். எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தமிழகத்தில் முதல் பெரிய கட்சியாக அதிமுக விளங்குகிறது.
அதேபோல, மத்தியில் பெரிய கட்சியாக பாஜக உள்ளது. இந்த 2 கட்சிகள் மீதும் தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசோடு இணக்கமான சூழல் அதிமுக-வுக்கு இருக்கும்போது, தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம். சாதி, மதம், மொழி, இனம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு இன்னும் பல கட்சிகள் எங்களோடு கூட்டணி சேருவதற்கான கால நேரம் உருவாகியுள்ளது.