• Sun. Nov 16th, 2025

24×7 Live News

Apdin News

பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு – கர்நாடகாவில் அறிமுகம்

Byadmin

Nov 15, 2025


தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில், உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் பல அமைந்துள்ளன. தற்போது மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளதன் அடிப்படையில், நாட்டிலேயே பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் முதல் மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் மாதவிடாய் குறித்து பொதுவெளியில் பேச தயக்கம் நிலவுகிறது

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களைக் கொண்டுள்ள தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில், முறைப்படுத்தப்பட்ட வேலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளதன் மூலம், நாட்டிலேயே பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் முதல் மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் படி, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் 18 முதல் 52 வயதுடைய பெண்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுப்பை சேமித்து வைத்து பின்னர் பயன்படுத்த முடியாது. மேலும் விடுப்பு பெற மருத்துவ சான்றிதழும் தேவையில்லை.

இந்தத் திட்டத்தின் மூலம், முறைப்படுத்தப்பட்ட துறைகளில் (அரசு மற்றும் தனியார்) பணிபுரியும் 3.5 முதல் 4 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள்.

ஆனால் வீட்டு வேலை செய்பவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், டெலிவரி பணியாளர்கள் போன்ற அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் சுமார் 60 லட்சம் பெண்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

எனவே, இந்த திட்டத்தை அமைப்புசாரா துறைக்கும் விரிவுபடுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

By admin