• Thu. Dec 18th, 2025

24×7 Live News

Apdin News

பெண் மருத்துவரின் ஹிஜாபை விலக்கிய நிதிஷ் குமார் – முஸ்லிம் நாடுகளில் விவாதிக்கப்படுவது என்ன?

Byadmin

Dec 18, 2025


பிகார் முதல்வர் நிதிஷ் குமார்

பட மூலாதாரம், Santosh Kumar/Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி டிசம்பர் 15, 2025 அன்று பாட்னாவில் ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கினர்

பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், டிசம்பர் 15 அன்று ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கும்போது, ஒரு முஸ்லிம் பெண் மருத்துவரின் முகத்தில் இருந்த ஹிஜாப்பை விலக்கினார்.

நிதிஷ் குமாரின் இந்த நடத்தை இந்திய ஊடகங்களோடு மட்டும் நின்றுவிடாமல், சர்வதேச ஊடகங்களிலும், குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலும் விவாதப் பொருளானது.

துருக்கி முதல் கத்தார் வரையிலான ஊடகங்கள் நிதிஷ் குமாரின் இந்தச் செயலைக் கண்டித்துள்ளன. இந்தியாவில் முஸ்லிமாக இருப்பது எளிதான காரியம் அல்ல என்று பாகிஸ்தானிலும் மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக பிகார் முதல்வராக இருக்கும் நிதிஷ் குமாரின் நற்பெயருக்கு, இத்தகைய நடத்தை ஏற்றதல்ல. இத்தகைய சூழலில், நிதிஷ் குமாரின் உடல்நிலை இப்போது முதலமைச்சர் பதவியில் இருப்பதற்கு ஏற்றதாக இல்லை என்று எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றன.

இது குறித்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, இந்த விஷயம் தனது வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று அவர் கூறினார்.

By admin