• Thu. Feb 5th, 2026

24×7 Live News

Apdin News

பெனி மனாஷே: இஸ்ரேல் இந்த 5,800 இந்தியர்கள் தங்கள் நாட்டில் குடியேறுவதை வரவேற்பது ஏன்?

Byadmin

Feb 5, 2026


பெனி மனாஷே, மிசோரம், இஸ்ரேல், யூத மதம், ஆலியா

பட மூலாதாரம், Rubaiyat Biswas

படக்குறிப்பு, மிசோரமில் உள்ள பெனி மனாஷே சமூகம், தங்களை யூத சமூகத்தின் காணாமல் போன பழங்குடியினரில் ஒன்றின் வம்சாவளியினராகக் கருதுகிறது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் வசிக்கும் பெனி மனாஷே சமூக மக்கள் இப்போது இஸ்ரேலில் குடியேறத் தயாராகி வருகின்றனர். இவர்கள் தங்களை யூத சமூகத்தின் ‘காணாமல் போன பழங்குடியினரின்’ (lost tribes) வம்சாவளியினர் என்று கருதுகின்றனர்.

வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பெனி மனாஷே சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் இஸ்ரேலுக்குச் செல்ல அனுமதிக்கும் ஒரு திட்டத்திற்கு இஸ்ரேல் அரசு 2025-ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ் சிலர் ஏற்கனவே சென்றுவிட்டனர்.

தற்போது இந்தியாவில் இவர்களின் எண்ணிக்கை சுமார் 5,800 ஆக உள்ளது. இவர்கள் இஸ்ரேல் செல்வதற்கான நடைமுறை 2026 பிப்ரவரி முதல் தொடங்கக்கூடும்.

இந்தச் சமூகம் முக்கியமாக மிசோரம் மற்றும் அண்டை மாநிலமான மணிப்பூரில் வசிக்கிறது.

கடந்த இரு தசாப்தங்களில் சுமார் 4,000 பெனி மனாஷே மக்கள் இஸ்ரேலுக்குச் சென்றுள்ளனர். 2005-ஆம் ஆண்டில் ஒரு முக்கிய ‘ரபி’ (யூத மதகுரு) இந்தச் சமூகத்தை யூத மதத்தின் காணாமல் போன பழங்குடியினராக அங்கீகரித்த பிறகு, இந்தப் பயணம் தொடங்கியது.

By admin