2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத்தின் முதல் ஏழு நாட்களில் 80,776 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் பெப்ரவரி மாத்தின் முதல் நான்கு நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 12,439 ஆகும்.
அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 9,283 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 6,946 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 5,401 சுற்றுலாப் பயணிகளும், போலந்திலிருந்து 3,454 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 5,037 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸலிருந்து 4,649 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், இவ்வாண்டின்ஜனவரி மாதத்தில் 277,327 நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
The post பெப்ரவரியின் முதல் ஏழு நாட்களில் வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்! appeared first on Vanakkam London.