• Thu. Mar 13th, 2025

24×7 Live News

Apdin News

பெரியார் தமிழ் மொழியை ‘காட்டுமிராண்டி மொழி’ எனக் கூறியது ஏன்?

Byadmin

Mar 13, 2025


பெரியார்

பட மூலாதாரம், DHILEEPAN RAMAKRISHNAN

பெரியார் மீது அவருடைய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒரு விமர்சனம், அவர் தமிழை ‘காட்டுமிராண்டி மொழி’ எனக் கூறினார் என்பதுதான்.

நாடாளுமன்ற மக்களவையில் மார்ச் 11ஆம் தேதியன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியாரின் பெயரைக் குறிப்பிடாமல், “தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை ஒவ்வொரு அறையிலும் (திமுகவினர்) வைத்திருக்கின்றனர். அவருக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர், திராவிட இயக்கத்தின் அடையாளம் என்கின்றனர். ஆனால், அவர் தமிழை ‘காட்டுமிராண்டி மொழி’ எனக் கூறியுள்ளார்” எனப் பேசினார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இத்தகைய விமர்சனத்தைப் பெரியார் மீது வைத்திருக்கிறார்.

உண்மையிலேயே பெரியார் தமிழ் மொழியை ‘காட்டுமிராண்டி மொழி’ எனக் கூறினாரா? தமிழ் மொழி குறித்த அவருடைய பார்வை என்ன?

By admin