• Thu. Sep 18th, 2025

24×7 Live News

Apdin News

பேராசிரியர் பிரிஜ் நரேன்: பாகிஸ்தானை தீவிரமாக ஆதரித்தவர் லாகூரிலேயே கொல்லப்பட்டது ஏன்?

Byadmin

Sep 18, 2025


பேராசிரியர் பிரிஜ் நரேன், இந்தியா, பாகிஸ்தான், ஜின்னா, காந்தி

பட மூலாதாரம், Govt M.A.O College Lahore/FACEBOOK

படக்குறிப்பு,

பிரிஜ் நரேன் பாகிஸ்தானின் ஆதரவாளராக இருந்தார், எனவே அவர் அங்கேயே வசிக்க வேண்டியிருந்தது. 1947இல் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பிரிவினை அறிவிப்புக்குப் பிறகு கலவரங்கள் வெடித்தபோது, ​​லாகூர் பொருளாதார நிபுணர் பிரிஜ் நரேன் நிக்கல்சன் சாலையில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியே வந்து, ‘இது இப்போது பாகிஸ்தானின் சொத்து. எனவே கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்க வேண்டாம்’ என்று கலவரக்காரர்களை அறிவுறுத்தத் தொடங்கினார்.

லாகூரில் வசித்த பேராசிரியர் பிரிஜ் நரேன், காலனித்துவ பஞ்சாபின் விவசாய பொருளாதாரம் குறித்த ஆய்வுகளுக்குப் பிரபலமானவர். அவர் 1888இல் பிறந்தார். இந்தியப் பிரிவினைக்கு முன்பு, லாகூரின் சனாதன் தர்மா கல்லூரியில் (பின்னர் எம்ஏஓ கல்லூரியாக மாறியது) பொருளாதாரப் பேராசிரியராக இருந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தால் பொருளாதாரத்தில் கௌரவப் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

“இந்திய துணைக்கண்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு, ’20ஆம் நூற்றாண்டின் சிறந்த பொருளாதார நிபுணர்களில்’ ஒருவராகக் பேராசிரியர் பிரிஜ் நரேன் கருதப்பட்டார்” என்று டாக்டர் ஜி.ஆர். மதன் தனது ‘Economic Thinking in India’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.

அவர் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து விரிவுரை ஆற்றினார், மேலும் இந்தத் துறையில் 15க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதினார். அவரது கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டன.

By admin