சென்னை: மூத்த குடிமக்களுக்கு 6 மாதங்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிகளுக்கு வழங்குதல் ஆகிய பணிகள் இன்று (ஜூன் 21) முதல் ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அடையாறு, வியாசர்பாடி, ஆலந்தூர், அயனாவரம் உள்ளிட்ட 40 பணிமனை பேருந்து நிலையங்களில் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர், வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில் வழங்கப்படும்.
இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று மற்றும் 2 வண்ண புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.