• Mon. Oct 21st, 2024

24×7 Live News

Apdin News

பேஸ்புக் போதை விருந்து! – 30 பேர் கைது

Byadmin

Oct 20, 2024


நுவரெலியா, கிரகறி வாவி கரையோரத்தில் உள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைப்பப்பட்டதில் போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .

நுவரெலியா பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் போதைப்பொருட்களுடன் பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்று இடம்பெறுகின்றது என்று பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கஞ்சா, ஐஸ், போதைப்பொருள் மாத்திரைகள், குஷ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகள் வைத்திருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் அனைவரும் ஆண்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 38 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

By admin