• Thu. Mar 13th, 2025

24×7 Live News

Apdin News

பைபிட்: 1.5 பில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி கொள்ளை – வட கொரியா ஹேக்கர்கள் செயல்படுவது எப்படி?

Byadmin

Mar 11, 2025


பைபிட் கிரிப்டோ கரன்சி, சைபர் கிரைம், வடகொரியா, ஹேக்கர்கள், கிரிப்டோ கொள்ளை, ஆன்லைன் திருட்டு, வடகொரிய ராணுவம், பிட்காயின், லாசரஸ் குழு

பட மூலாதாரம், Getty Images

வட கொரிய அரசாங்கத்துக்காக வேலை செய்பவர்கள் என கருதப்படும் ஹேக்கர்கள், வரலாற்றிலேயே மிக அதிக அளவாக 1.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,000 கோடி) அளவுக்கான கிரிப்டோவை கொள்ளையடித்த நிலையில், அதில் குறைந்தது 300 மில்லியன் டாலர் பணத்தை மீட்க முடியாத வகையில் அவர்கள் மாற்றியுள்ளனர்.

லாசரஸ் குரூப் எனும் பெயரில் அறியப்படும் இந்த ஹேக்கர்கள், கிரிப்டோ வர்த்தக நிறுவனமான பைபிட்-ஐ (ByBit) ஹேக் செய்து, அதிலிருந்த ஏராளமான கிரிப்டோ கரன்சியை கொள்ளையடித்துள்ளனர்.

அப்போதிலிருந்து, ஹேக்கர்கள் அந்த கிரிப்டோகரன்சியை பணமாக மாற்றும் முயற்சியை தடுப்பதற்கு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஹேக்கிங் குழுவினர் இதிலிருந்து கிடைக்கும் பணத்தை வட கொரியாவின் ராணுவ மேம்பாட்டிற்கு திருப்பி விட 24 மணிநேரமும் வேலை செய்வதாக, நிபுணர்கள் கூறுகின்றனர்.

By admin