• Sat. Aug 23rd, 2025

24×7 Live News

Apdin News

பொன்முடியின் பேச்சு அவருடைய சொந்த கருத்து அல்ல: உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கம் | Govt Chief Advocate explain in High Court about ponmudi speech is not his own opinion

Byadmin

Aug 23, 2025


சென்னை: சைவம், வைணவத்​துடன் பெண்​களை தொடர்​புபடுத்தி முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி ஒரு விழா​வில் பேசிய பேச்சுக்கு அனைத்து தரப்​பிலும் கடும் எதிர்ப்பு கிளம்​பியது. அவரது இந்த பேச்சு காரண​மாக பொன்​முடி தனது பதவியை இழக்க நேரிட்​டது. பொன்​முடிக்கு எதி​ராக 140-க்​கும் மேற்​பட்ட புகார்​கள் போலீ​ஸில் அளிக்​கப்​பட்​டன.

பொன்​முடி​யின் இந்த பேச்சு தொடர்​பாக உயர் நீதி​மன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்​கடேஷ் தாமாக முன்​வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்​தார். இந்த வழக்கு நீதிபதி என்​.சதீஷ்கு​மார் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் ஆஜராகி, பொன்​முடிக்கு எதி​ராக அளிக்​கப்​பட்ட அனைத்து புகார்​கள் மீதும் விசா​ரணை நடத்​தப்​பட்​டு, குற்​றச்​சாட்​டுக்கு முகாந்​திரம் இல்லை என்​ப​தால் முடித்து வைக்​கப்​பட்​டது எனக்​கூறி அறிக்​கையை தாக்​கல் செய்​தார்.

அப்​போது நீதிப​தி, இந்த புகார்​களின் மீது வழக்​குப்​ப​திவு செய்ய முகாந்​திரம் இல்லை என போலீ​ஸார் எப்​படி முடிவுக்கு வந்​தனர். இந்த புகார்​களை வேக, வேக​மாக முடித்து வைத்​தது போல மற்ற புகார்​கள் மீதும் வேகம் காட்​டு​வார்​களா என்​றார். அப்​போது புகார்​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஜி.எஸ்​.மணி, புகார்​தா​ரர்​களுக்கு தெரிவிக்​காமலேயே புகார்​கள் முடித்து வைக்​கப்​பட்​டுள்​ளன என்​றார்.

அதற்கு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன், போலீ​ஸார் புகார்​களை முடித்து வைத்​ததை எதிர்த்து சம்​பந்​தப்​பட்ட குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் புகார்​தா​ரர்​கள் வேண்​டுமென்​றால் மனு தாக்​கல் செய்து நிவாரணம் பெறலாம். பொன்​முடி தெரி​வித்த கருத்து அவருடைய சொந்த கருத்து அல்ல. 1972-ம் ஆண்டு ஒரு சமூக சீர்​திருத்​த​வாதி தெரி​வித்த கருத்​து. அதைத்​தான் பொன்​முடி​யும் மேற்​கோள் காட்டி பேசி​னார், என்​றார்.

அதையடுத்து நீதிப​தி, “சைவம், வைணவம் மற்​றும் பெண்​கள் தொடர்​பாக பொன்​முடி பேசிய முழு வீடியோவை​யும், அவர் மேற்​கோள் காட்டி பேசி​ய​தாக கூறப்​படும் 1972-ம் ஆண்​டுக்​கான ஆதா​ரத்​தை​யும் அரசு தரப்​பில் தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்தரவிட்டு வி​சா​ரணை​யை வரும்​ ஆக.28க்​கு தள்​ளி வைத்​துள்​ளார்​.



By admin