• Mon. Sep 1st, 2025

24×7 Live News

Apdin News

பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் பதவியேற்றார்: கோப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார் சங்கர் ஜிவால் | G Venkatraman assumes office as DGP in charge Shankar Jiwal departs

Byadmin

Sep 1, 2025


சென்னை: தமிழக சட்​டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி​யாக ஜி.வெங்​கட​ராமன் நேற்று பொறுப்​பேற்​றுக் கொண்​டார். அவரிடம் கோப்​பு​களை ஒப்படைத்து சங்​கர் ஜிவால் விடை​பெற்​றார்.

தமிழக காவல் துறை​யின் சட்​டம் ஒழுங்கு டிஜிபி​யாக இருந்த சங்​கர் ஜிவால் நேற்று ஓய்வு பெற்​றார். இதையடுத்​து, சட்​டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி​யாக ஜி.வெங்​கட​ராமனை நியமனம் செய்து தமிழக அரசின் உள்​துறை செயலர் தீரஜ்கு​மார் உத்​தர​விட்​டார். தமிழக காவல் துறை​யின் நிர்​வாக பிரிவு டிஜிபி​யாக இருக்​கும் வெங்​கட​ராமனுக்​கு, கூடு​தல் பொறுப்​பாக சட்​டம் ஒழுங்கு பணி​யும், தமிழக காவல் துறை​யின் தலைமை இயக்​குநர் பொறுப்​பும் வழங்​கப்​பட்​டுள்​ளது.

அந்​தவகை​யில், சட்​டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பை ஜி.வெங்​கட​ராமன் நேற்று ஏற்​றுக்​கொண்​டார். அவரிடம் ஓய்​வு​பெற்ற சங்​கர் ஜிவால் அனைத்து பொறுப்​பு​களை​யும் ஒப்​படைத்​தார். இதையடுத்து, வெங்​கட​ராமன் அரசு கோப்​பு​களில் கையெழுத்​திட்டு பொறுப்​பு​களை அதி​காரப்​பூர்​வ​மாக ஏற்​றார்.

தொடர்ந்​து, டிஜிபி சங்​கர் ஜிவாலை வழியனுப்​பும் நிகழ்வு நடை​பெற்​றது. சங்​கர் ஜிவாலை டிஜிபி அலு​வலக வாயில் வரை சென்று வெங்​கட​ராமன் உள்​ளிட்ட உயர் அதி​காரி​கள் வழியனுப்பி வைத்​தனர்.

இந்​நிகழ்ச்​சிக்கு பிறகு வெங்​கட​ராமன் உயர் அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். இதில் ஏடிஜிபிக்​கள் டேவிட்​சன் தேவாசீர்​வாதம், சந்​தீப் மிட்​டல், ஐஜிக்​கள் அன்​பு, அஸ்​ரா​கார்க் உள்​ளிட்ட உயர் அதி​காரி​கள் கலந்து கொண்​டனர். ஆனால், டிஜிபி ரேங்​கில் உள்ள யாரும் இதில் பங்​கேற்​க​வில்​லை.

நாகப்​பட்​டினத்​தைச் சேர்ந்த வெங்​கட​ராமன், 1994-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்​வெழுதி தேர்ச்சி பெற்று காவல்​துறை பணி​யில் சேர்ந்​தார். இவர் பெரம்​பலூர், சேலம் மாவட்​டங்​களில் காவல் கண்​காணிப்​பாள​ராக பதவி வகித்​துள்​ளார். மதுரை மாநகர சட்​டம் ஒழுங்​கில் காவல் துணை ஆணை​ய​ராக​வும், மத்​திய புல​னாய்​வுப் பிரி​விலும் பணி​யாற்​றி​யுள்​ளார்.

மேலும், காவல் துணை தலை​வ​ராக சேலம் சரகத்​தி​லும், குற்​றப்​பிரிவு குற்​றப் புல​னாய்​வுத் துறை​யிலும் பணி​புரிந்​துள்​ளதோடு, காவல் துறை தலைமை இயக்​குநர் அலு​வல​கத்​தில் காவல் தலை​வர், காவல் கூடு​தல் இயக்​குநர் மற்​றும் காவல் இயக்​குநர் போன்ற பதவி​களை வகித்​துள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இதே​போல், தமிழ்​நாடு காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் நேற்று ஓய்வு பெற்ற நிலை​யில், அப்​ப​தவிக்​கு, காவல்​துறை தலை​மைய​கத்​தின் டிஜிபி​யாக இருந்த வினித் தேவ் வாங்​கடே-வை நியமித்து உள்​துறை செயலர் தீரஜ் குமார் உத்​தர​விட்​டுள்​ளார்​.



By admin