• Thu. Jun 26th, 2025

24×7 Live News

Apdin News

பொலிஸாரை கத்தியால் தாக்கிய சகோதரர்களுக்கு சிறை!

Byadmin

Jun 26, 2025


இங்கிலாந்தின் வடக்கு பிராந்தியமான லூடன் கிரவுன் நகரத்தில் பொலிஸாரை கத்தியால் தாக்கிய சகோதரர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் குறித்த சகோதரர்கள் இருவரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, லூடன் கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பவ தினத்தன்று, மேற்படி சகோதரர்கள் இருவரும் வீதியில் நடந்து சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பொலிஸார் தட்டிக் கேட்க முயன்றபோது அந்த நபர்கள், பொலிஸாரையும் கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் 2 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், சகோதரர்களை மடக்கிப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த வழக்கின் விசாரணையில் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் 2 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

By admin