1
இங்கிலாந்தின் வடக்கு பிராந்தியமான லூடன் கிரவுன் நகரத்தில் பொலிஸாரை கத்தியால் தாக்கிய சகோதரர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் குறித்த சகோதரர்கள் இருவரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, லூடன் கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சம்பவ தினத்தன்று, மேற்படி சகோதரர்கள் இருவரும் வீதியில் நடந்து சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பொலிஸார் தட்டிக் கேட்க முயன்றபோது அந்த நபர்கள், பொலிஸாரையும் கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் 2 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், சகோதரர்களை மடக்கிப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த வழக்கின் விசாரணையில் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் 2 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.